அம்மா
- பத்மநாபபுரம் அரவிந்தன்-
மழையில் நனைந்து வீடு வருகையில்
அண்ணா கேட்டான் குடை ஏன் எடுக்காமல்ப்
போனாய்?
அக்கா கேட்டாள் மழை விடும் வரை
ஒதுங்காமல் நனைந்து ஏன் வந்தாய் ?
அப்பா சொன்னார் ஜலதோஷம், காய்ச்சல்
வந்து... பட்டால்த் தான் தெரியும் ... கழுதைக்கு,
என் தலையை துவட்டியபடியே அம்மா சொன்னாள்...
புத்திகெட்ட மழை.. என் பிள்ளை வீடு வரும் வரை பெய்யாமல்இருக்கத் தெரியவில்லையே அதற்கு..
No comments:
Post a Comment