Friday, December 17, 2010

அம்மா - பத்மநாபபுரம் அரவிந்தன்-

அம்மா  

- பத்மநாபபுரம் அரவிந்தன்-

மழையில் நனைந்து வீடு வருகையில் 
அண்ணா கேட்டான் குடை ஏன் எடுக்காமல்ப்
 போனாய்?
அக்கா கேட்டாள் மழை விடும் வரை 
ஒதுங்காமல் நனைந்து ஏன் வந்தாய் ?
அப்பா சொன்னார் ஜலதோஷம், காய்ச்சல் 
வந்து...  பட்டால்த்  தான் தெரியும் ... கழுதைக்கு,
என் தலையை துவட்டியபடியே அம்மா சொன்னாள்... 
புத்திகெட்ட மழை.. என் பிள்ளை வீடு வரும் வரை பெய்யாமல்இருக்கத் தெரியவில்லையே அதற்கு..

No comments:

Post a Comment