Tuesday, August 21, 2012

பத்மநாபபுரம் அரவிந்தன் - கவிதைகள் -


  

நினைவுகள் -பத்மநாபபுரம் அரவிந்தன் - 

- 04-07-2012 - வல்லமை இணைய இதழ்

திடீரென்றுசம்மந்தமே இல்லாத 
பொழுதொன்றில் உன் நினைவுகள்
எழுந்து விரிகிறது மனதில்
இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்…
எப்படி இருக்கிறாய் எதுவுமே
தெரியாத போதிலும் ..
கற்பனையில்
துல்லியமாய்த் தெரிகிறாய்
அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம்
ஆனால் என் மனதினுள் அப்படியே
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன்
முகமும், பேச்சும், சிரிப்பும் சற்றும் மாறாமல் பளீரிடுகிறது .
..
கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில் சாய்ந்து
என் விரல்களைக் கோர்த்தபடி
நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும் ஏன் வந்தது என் நினைவில் மீண்டும்?
விரக்தி நேர்கையில் சுகங்களாய்க்
கழிந்த பொழுதுகளை மீண்டும்
மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ?
எங்கிருந்தாலும் என்னைப்போல்
உனக்கும் என்றாவது தோன்றுமோ
நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமான
பொழுதுகளை நினைக்க……


அது ஒரு மழை நாள் - பத்மநாபபுரம் அரவிந்தன் -  

- - 21 - AUGUST - 2012 -


அன்றொரு நாள்ப் பெய்த பெருமழையில் 

நனைந்து நின்ற உன்னை என் குடைக்குள் அழைத்தேன் ..

குடை வாங்கி வீசிவிட்டு என்னையும் மழை  நனையச் 

சொன்னாய் நீ.. 

மூக்கு நுனியில் நீர் சொட்ட, பூத்திருந்தப்

பூ போல பளீரிட்ட உன் முகத்தை என்னால் 

வ்வொரு மழை போதும் யோசிக்க முடிகிறதாயினும் 

உன்னோடு  நனைந்த அம்மழைக்குப் பிற்பாடு 

இன்றுவரை என் மனதுள் எம்மழையும் பெய்யவில்லை ...

எங்கோ ஓரிடத்தில் நீயும் மழை ரசிக்கும் போது

அன்று பெய்த அம்மழை ஈரமாய் உன்னுள் 

சிலிர்த்துத் தெறிக்கலாம்  ..... பழைய நினைவின் 

மேகங்களை கலைத்து சொரிந்தபடி...  



மனபோதை     -              வல்லமை இணைய இதழ் - 15 -ஆகஸ்ட்-2012  

பத்மநாபபுரம் அரவிந்தன்  

போதையென்பது வஸ்துக்களில்ல 
அது.. மனம் சார்ந்த நிலமைகளின்
வலிமைகளைப் பின்பற்றி 
மூளையைக் கிறக்குவது...

மனச் சோர்வின் போது 
ஒரு மிடறு போதும் ... தலைகேறித் தாவும் 
மகிழ்ச்சியின் உச்சத்தில் கோப்பைகள் பல 
உள்ளிறங்கிப் போனாலும் 
தாளம் தப்பித் தள்ளாடது...

உதடுக்கும் மதுக் கோப்பைக்குமிடையே   
மெல்லிய நுலிழையால் இணைந்து கிடக்கிறது 
போதைக் காற்றாடி ...
இருப்பதா பப்பதாவென்பது 
மனக் காற்றின் வேகத்தைப் பொறுத்தது.... 




11-03-12 - திண்ணை இணைய இதழில் வெளியான என் இரு கவிதைகள்
பத்மநாபபுரம் அரவிந்தன் -
  
தொடர்பறுதல்

                                             
ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து

மாடியில் படுத்தபோது தென்பட்ட

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும்

விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு

எனை விட்டுத்

தொடர்பறுந்துப் போனவர்கள் போல..   

ஒன்றாய்ப் படித்துசுற்றிய நண்பர்கள் ...

நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள்

பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள்

நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் 

இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் ... 

பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு..

முகநூலிலும்ஆர்குட்டிலும் தேடித் தேடி 

அலுத்தப் பின்பும்   அழிபடாமல்

மனதுள் விரிகிறது அவர்களுடனான

எனது நாட்கள் ..

புதிது புதிதாய்க் கிடைக்கும் தொடர்புகளும்

சிறிது நாளில் தொடர்பறுகிறது

கைபேசி அழைப்புகளும் பயனற்று போனபின்பு 

எண்களை அழித்துவிட்டு   .. எதிர் நோக்கிக் காத்திருக்க

ஒன்று மட்டும் புரிகிறது 

தொடர்பறுதல் தொடர்ந்துகொண்டேயிருக்கும்    

என் தொடர்பு 

புவியறுக்கும் காலம் வரை..  


உளத் தீ ..

                                   - பத்மநாபபுரம் அரவிந்தன் -


சிறிதொரு தீப்பொறி மனதுள்

வைத்துசொற்களால் ஊதிப்

பெருந் தழலாக்கினாய்   நீ

உன் சொற்களின் சூடும்

வார்த்தைகளின் வெம்மையும்   

பொசுக்கிப்  போட்டதென் மனதைப் பலமுறை

ஆறாமல் போன  ரணங்களில் தவித்ததென் மனம்

காரணம் புரியாமல்  

குடிக்குள் புகுந்தென்னை சுருக்க முயன்றேன் 
அதுவே காரணமாய் ஊர் முன்   
நிலை நாட்டினாய் உன்னை..   

எல்லோர்  நிலைபாடும் என்னைக்

குறையூற்றி சிறுகச் சிறுகவாய்க் கொன்றொழித்துக்

கொண்டிருக்க உனக்கு மட்டுமேத்

தெரியும் எனக்குள் நீ வைத்தத் தீயே 

என்னை எரித்துக் கொண்டிருப்பதும்

இப்பொழுதெல்லாம் தீயையே நான் ரசித்துக்

கொண்டிருப்பதும்..  

‎15-01-12 திண்ணை இணைய இதழில் வெளியான என் கவிதை

ஓர் இறக்கை காகம் 

                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

முட்டை விரிந்து வெளிவரும் போதே 
ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது 
அக்காகக்  குஞ்சுக்கு ... சக முட்டைகள்  விரிந்து 
அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க 
இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல் 
மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில்
வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு..   
பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு  
ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது ..
முடியாது போக கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது..
தாய்க் காகம் அதற்கு கொண்டு கொடுத்தது 

சக காகங்கள் சொல்லும் ஊர் கதைகள்
 கேட்டு ஆசை ஊற்றெடுக்க  
ஒருநாள் 
கூட்டிலிருந்தது தாவிக் குதித்து தரைக்கு வந்தது.. 
மிகத் துரித நடையது தானாய் பழகி 
அடிமரப் பொந்தொன்றில் தனக்கானக் 
கூட்டை தானே அமைத்தது ..

காலை முதல் மாலை வரை 
நடந்து நடந்தே இரை தேடித் திரிய 
ஊர்மக்கள் கவனம் அதன்மேல் திரும்பி 
ஒவ்வொரு வீடும் அன்பாய் அதற்கு உணவுகள் 
கொடுக்க .... பறக்கும் காகங்கள் பொறாமையில் 
எரிந்தன... நடந்தே திரியும் காகத்தை ஒழிக்க  
திட்டங்கள் தீட்ட கூட்டங்கள் போட்டன ...அவற்றால் 
ஒன்றும் செய்ய முடியாமல்ப் போக 
எதனையும் பொருட்படுத்தாது 
நடந்து நடந்தே வாழ்ந்து முடித்து 
போய்ச் சேர்ந்தது ஓர் இறக்கைக் காகம் ..

பறக்கும் காகங்கள் சாதாரணமாய்ப் போக 
நடக்கும் காகத்தை ஊர் தேடி அலைந்தது 
அது மரணித்த பின்பும் பரம்பரை பரம்பரையாய் 
கதை வழி இன்னும் வாழ்கிறது மனதுள்.... 
‎22-01-12 திண்ணை இணைய இதழில் வெளி வந்த எனது கவிதை - பத்மநாபபுரம் அரவிந்தன் -
பெருங் கோட்டைச் சுவர் தாண்டி
உள் நுழையத் தேரோடும் தார் சாலையின்
இருமருங்கும் புது வீடுகள்..முப்பது ஆண்டுகளுக்கு முன்பான
ஊர் நெஞ்சுள் விரிகிறது..நிரம்பித் தழும்பும் பெருமாகுளம்
இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப்
போகும் சிறுவர் கூட்டம்.. குளம்
களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்..கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக்
களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள்
ஓயாதப் பறவைகளின் குரல்
சவக் கோட்டை மேல்ப் பறக்கும்
பருந்துக் கூட்டம்..மாலையில் நாற் தெருவும் குழந்தைகள்
இளைஞர்கள் விளையாட்டு …திடீரென வரும் சண்டை .. சற்று நேரத்தில் சமாதானம்
பள்ளிக்கூட நடையில் இரவெல்லாம்
உலகலசும் விவாதங்கள்
அதிகாலை ராமசாமி கோவில் சுப்ரபாதம்
ஊர் வாழ்ந்துக் கொண்டிருந்ததுஇன்றும்
ஊரில் மக்கள் வாழ்கிறார்கள்
ஊர் செத்துக் கிடக்கிறது….
08-01-2012 திண்ணை இணைய இதழில் வெளியான எனது கவிதை..... 


சிலை
பத்மநாபபுரம் அரவிந்தன்


அக் கிராமத்தின் சிற்றோடைக்
கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை
செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும்
சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை...


கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க 
கச்சை கட்டிய கூர் முலையும்வடிவேயான 
இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கும் 
 பாவனையில் ... இடக்கை  நாடி தாங்க 
வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் 
கை விரல்கள் சிலவற்றை காணவில்லை..காலச் சுழற்சியில் 
உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்....


அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ
எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை...
வயதான ஒருவர் சொன்னார் ... 
தன் சிறு பிராயத்தில்
கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது  
 நிற்க முடியாமல்ப் படுத்ததென்று...
யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் 
உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்...


சிதைந்துக் கொண்டிருப்பது    
வெறுமொரு கற்சிலயல்ல...
சிந்தையுள் காதலுடன் ..
யாரையோ நினைவிலேற்றி 
மனமுழுக்க வடிவமைத்து 
விரல்கள் வழி மனமிறக்கி 
உளிகளில் உயிர் கொடுத்து 
பலநாட்கள் பாடுபட்டுச்
செய்தெடுத்த ...
எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர்
அற்புத சிற்பியின் காதலுடன்
கூடிய கலையும்உழைப்பும் தான் ...

திண்ணை இணைய இதழில்09-10-11அன்று  வெளி வந்த என் கவிதைகள்   




அகதிக்  காகம்           
                               - பத்மநாபபுரம் அரவிந்தன் -

நீண்டதோர் கடற்  பயணத்தின்
மூன்றாம் நாள் அதிகாலை
கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர
உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..

சில நூறு மைல்கள் கரையே இல்லாப்
பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ,
கண்டம் கடக்கும் பறவைகள் பலவும்
ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்..
காகங்கள் பொதுவாக 
இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை..
இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில்
அடித்துவரப் பட்டிருக்கலாம்.. 
 தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய் 
அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்..
எம்பிப் பறக்க எத்தனித்து
பெருங் காற்றின் வேக வீச்சில்
தடுமாறித் தத்தளித்து மீண்டுமது
கப்பல் தளத்தினில் வந்தமரும்

தட்டில் அரிசிகடலைமாமிசத் துண்டுகள் 
கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து
தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..
காகமே ஆனாலும் அது நம் நாட்டுக் காகமன்றோ? '

இன்னமும் இருக்கிறது நான்கு நாட்கள் 
தொடர் கடற்  பயணம்.. காற்றில்லா நேரத்தில் 
சிறிது தூரம் பறந்து விட்டு
வந்தமர்ந்து ஓய்வெடுக்கும்.. 
சென்னை - ஆஸ்திரேலியா
விசாவின்றி வந்தடைந்து 
கரைகண்டக் களிப்பினில்
வேகமாய் எம்பி சுய குரலில்க்
கத்திவிட்டு கரை நோக்கிப் 
பறந்தததுமறுநாள்.... 
உடலெங்கும் கொத்துக் காயங்களுடன் 
கப்பல்த் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி
அமர்ந்திருக்கக் கண்டேன் நான்..
தலை சாய்த்து எனை நோகிக் கத்தியது இப்படியோ ?
அயல் நாட்டில் அடிவாங்க வேண்டாமென்றும் 
வெளி நாட்டு மோகமது  கூடாதென்றும்....'


சிதைத்தொழித்தல் 
                                    - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -என் பால்ய காலத்தில்
பார்த்திருந்த என் மாவட்டம்
 
ஐம்பெரும் நிலங்களில் நான்கினைக் கொண்டது...முப்பது ஆண்டுக்குள் இயற்கையின்
பேரழகை மொத்தமாய்  சிதைத்தொழிக்க எப்படி முடிந்ததென்று யோசித்து நின்றிருந்தேன்....மேகங்கள் வருடும் பெருங் குன்றுகள்  பலவும் 'குவாரி'களாய்க்
கல்லுடைத்துத் தரைமட்டமாகி
 
நீர் தேங்கி பெரும் பள்ளமாகியது..விரிவயல் வெளிகளின் பெரும் பகுதி
வீடுகள்கல்யாண மண்டபங்கள்பெட்ரோல் நிலையமென்று புது முகம் கொண்டாயிற்று..பரந்து விரிந்திருந்த ஏரிகள்
சுருங்கி குளங்குட்டையாகியது ...மலையடிவாரங்கள் ஒவ்வொன்றிலும் அரசியல்வாதிகளின் தொழில்நுட்பக் கல்லூரிகள் தேக்குஈட்டிபலாஅயனி மரங்களெங்கே? வேளி மலை அழகிழந்து ரப்பர்ப் பால் வடிக்கிறது..செம்மறியாட்டுக் கிடையும்வாத்துகள் மேயும் வயலும்
எங்கெங்குத் தேடியும் காணவில்லை ..சிட்டுதூக்கணாங் குருவிகள்அடைக்கலங்   குருவிகள் குடி பெயர்ந்து சென்றனவாதற்கொலைச் செய்தனவாவிரிந்து சென்ற ஆறுகள் சூம்பிப் போய் ஓடையாய் மாறிற்று 
 
ஆல்அரசுபுளி மரத்தில்  கருங் சிறு மடிக் குடைகள் கட்டித் தூக்கியதுபோல் தொங்கிக் கிடக்கும் வவ்வால்கள்
ஒன்றையும் காணவில்லை... ஏரிக் குளங்களெல்லாம்
பன்னீர் போல் நிறைந்திருந்த தண்ணீரில் மீன் வளர்ப்புத் துவங்கியதால் இரவுகளில்க்
கொட்டப்படும் சாணியும்கறிக் கடைக்
கழிவுகளும் தண்ணீரை மொத்தமாய்
சாக்கடைப் போலாக்கியது... குளித்தெழுந்தால்  அரிப்பு வந்து சொறிகிறது...அனைத்தையும் வெறியோடு அழித்தெறிந்து
முன்னேகிச் சென்றொருநாள் சகலமும் தூர்ந்த பின்பு .. சிலர் யோசிக்கக் கூடும்...பூமியின் இயற்கை முலைகளை
வெட்டிவிட்டு சிலிக்கான்   முலைகளை ஒட்ட வைத்தப்  பெருந் தவற்றை .....

02-10-2011 
திண்ணை இணைய
 இதழில் வெளிவந்த என் கவிதைகள் 
காத்திருப்பு 
                      - 
பத்மநாபபுரம் அரவிந்தன் - 

(02-10-2011 
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதை)குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள் விளாசப் படாமலேயே
மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால்
பெருந்தொகை வாங்கிக்கொண்டு
சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும் விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது ..நியாயங்களின் பாதைகளில்  முள்வேலிப் போட்டு
அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது ...ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது
வாக்குப் பதிவு இயந்திரத்தின்  பொத்தான்கள்
உள்ளேப் போவதும்வெளியே வருவதுமாய்
நகர்கிறது ஐந்தாண்டு... காட்டப்படும் 
 
சொத்துக் கணக்குகள்
யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை
உட்பூசல்களும்வெளிப்பூசல்களுமாய்
உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் ...பொது மக்கள் சகலரும்
ஒண்டிக் குடித்தனத்தில் ஒளிந்து கொள்கிறார்கள்
இலவசமாய் பலதும் கிடைத்தும் ..விலயேற்ற வீரியம்
கொடுங் கைகள் கொண்டுத் தாக்கித் தகர்க்கிறது
மீண்டுமொரு மௌன ஐந்தாண்டுத் தவத்தில்
காத்துக் கிடக்கிறார்கள்  எப்பொழுதும் போலவே .....

 .

பிச்சைக் காரர்கள் 
                                      - 
பத்மநாபபுரம் அரவிந்தன் -  
வயோதிகக் கூனால் வளைந்த நடையுடன்  பஞ்சடைத்தக் கண்களும் நடுங்கும் உடலுமாய் ... கந்தல் உடையுடன் கையேந்தி நின்ற அந்தப் பிச்சைக் காரனுக்கு தேனீர் வாங்கித் தந்து  கையில் பத்து ரூபாய்க்
கொடுத்தபோது ... நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது...மின் விசிறியின் கீழே , சுழல் நாற்காலியில்
அமர்தபடி மூன்று  முக இணைப்பிற்காய் ரூபாய்
ஐயாயிரம்  லஞ்சமாய்  வாங்கிய அந்த மின் வாரியப்
பிச்சைக் காரனுக்கு... நானிட்டப்    பிச்சையும்
முழுக் குப்பி  விஸ்கியும்  எத்தனை நினைத்தும்
கனக்கிறது மனதுள் அழியாமலேயே.... 


நினைவுகள் 
                          - 
பத்மநாபபுரம் அரவிந்தன் -
திடீரென்று சம்மந்தமே இல்லாப் பொழுதொன்றில் உன் நினைவுகள் எழுந்து விரிகிறது மனதில் இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்... எப்படி இருக்கிறாய் எதுவுமேத்
தெரியாத போதிலும் ..கற்பனையில் துல்லியமாய்த் தெரிகிறாய் அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம்
ஆனால் என் மனதுள் அப்படியே
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன்
முகமும்பேச்சும்சிரிப்பும் சற்றும் மாறாமல்ப்
பளீரிடுகிறது   ...கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில்ச் சாய்ந்து
 
என் விரல்களைக் கோர்த்தபடி
நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஏன் இன்றென்னை வந்தடைகிறது மீண்டும்விரக்தி நேர்கையில் சுகங்களாய்க் கழிந்த பொழுதுகளை மீண்டும்
மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ?எங்கிருந்தாலும் என்னைப்போல் உனக்கும் என்றாவதுத் தோன்றுமோ
நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமானப்
பொழுதுகளை நினைக்க......


கோமறத்தாடியின் மறுநாட்க் கவலை
                                                                          - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -(02-10-2011 
திண்ணை இணைய இதழில் வெளிவந்த என் கவிதை)
ஓங்கி ஒலிக்கும் ஒற்றை முரசின் 
தாளத்தில்த் துள்ளும் கோமறத்தாடியின்

கை இருந்த கமுகம் பூ உதிர்ந்து தெறிக்க 
ஆக்ரோஷ ஆட்டத்தில்... பலமாய் வெளிவரும்

அவர் குரலற்ற வேறொன்று...  வியர்த்து விறுவிறுக்க

ஆடும் மாடனுக்கு  சாராயம் கலந்த

இளநீர்கள் கொடுத்து உக்கிர ஆட்டத்தை

உச்சத்தில் கொண்டு போய்அதிரும் முரசினை

சட்டென்று  நிறுத்தி... உருவாகும் அமைதியில்

கோமறத்தாடியின் உருவில் மாடனின் குரல் மட்டும்

சத்தமாய் ஒலிக்கும்...நீட்டப்படும்  அவித்த முட்டைகள் தின்று ... மீண்டும் சற்றே

சாராயம் குடித்து  திருநீறு பூசி குறிசொல்லி முடித்து 
சட்டென்று தரையில் மாடன் விலகிமனிதனாய் சரிய
 
தண்ணீர்த் தெளித்து புதுத் துணி உடுத்து 
கறிச்சோறு   தின்னும் பொழுதில் நினைப்பார் 

'என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்

நாளை முதல் சாப்பாடு ஒருவேளை ...
இன்று காலில் விழுந்தெழும் பக்தர்கள் 
நாளை மீண்டும் சொல்வார்கள் ,
ஏதாவது சோலி மையிருக்குப் போவும் ஓய்...."


ராசிப் பிரசவங்கள்  
                           
                                    - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -
நாள் கிழமைப் பார்த்து 
டாக்டருக்குச் சொல்லிவிட்டால்
கோள் ராசி பயமில்லை....டாக்டரின்
கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் ...
மிகச் சிறந்த ராசியதில்சுத்த நட்சத்திரத்தில்
அற்புதமான நாளன்று - அறுவை முறை கலையோடு
அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம் 
இயற்கையின் கை விட்டு கத்திக்கும்காசுக்கும்  கைமாறி
காலங்கள் ஆகிப் போச்சு..
என்  குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல்
பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்..
டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்...
சோதிடமும் தெரிய  வேண்டும்..  ராகுகேதுகுரு பெயற்சி 
தவறாமல் சொல்ல வேண்டும்...
நல்ல நாள் பார்த்துஅறுத்தெடுத்து அத்தனை
சேய்களையும் நாடாளச் செய்ய வேண்டும்..
பிறப்பவை அத்தனையும் நாடாள வந்து விட்டால்
குடி மக்கள் என்றிங்கு எவர் தான் இருப்பாரோ?
-------------------------------------------------------------------------------------------------



புராதனத் தொடர்ச்சி
                                           - 
பத்மநாபபுரம் அரவிந்தன்
 -

( 25-09-2011  
திண்ணை இணைய இதழில் வெளி வந்தது  )

புராதனச் சம்பவங்கள் புத்தியில்
படிமமேறி  நிகழ் வாழ்வில் நெளிந்து
உட்ப்   புகவும்,  வெளி வரவும் முடியாது
உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய் 
சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும்
துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும் 
படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில் 
புதியன எதுவும் புராதனத்துடனே ஒப்பிட்டு நிற்கும்...
தன்னுள்ப் புலம்பும் மனம்...

புதியனவென்று எதுவும் இல்லை .. எல்லாம்,எல்லாம் 
புராதனத்தின் தொடரே.... '




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHXSMz3u8-oUEf5pQo2zJt774ONmmIxIuV9p2BMNssyP3Itg8knEclQ3yqouATkM-d0b8gWn_yySMuzlI9I5UkYzQiRE8f-Bvr-qmiFzgEG9HEp7NKkDMoFMW2VBHp5prMSfyHBN2F2k/s320/ARULMOZHI-35.jpg





தேடல்                                        
             -  பத்மநாபபுரம் அரவிந்தன் -

பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில் 
தானாய் வழிகிறது கனிவுமனம் வழி ஊறி
தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு
கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து
கசிந்துருகும் காதல் ...   என்  காய்த்த கைதனில்
பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை...
சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள்
வானோக்கி எம்ப எத்தனிக்கும் ...
விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள் 
அவள் மேல் வீசும் சோழ தேசத்து
பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்....
 மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும்
அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு
மனக் கண்ணில் மறையாது
எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது
மனைவிமகன் மேலிருந்த தேடல் மெல்ல
மகளின் மேல் நகரும் காலம்
தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் ...
கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை
கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை
எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து
யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள்
சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல
 முத்தங்கள் வாங்கவேண்டும் ....

ஒரு கடலோடியின் வாழ்வு
                                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -


திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள் 

உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு 

வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்... 

கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் ...

அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் ...

எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு

கர்விக்கும் மனம்...  மறுநொடி சென்றமரும் 

மனைவிகுழந்தைகள் பக்கத்தில் ....

கண்கள் இங்கும் மனமங்குமாய்  

விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும்

நாளை மீண்டுமோர் விடியல்..  



18-09-2011 திண்ணை இணைய இதழலில்   வெளியான என் இரு கவிதைகள்...

தஞ்சை பெரியகோயில்        
-      பத்மநாபபுரம் அரவிந்தன்  –

சிந்தையுள் சிவனேற... சிவ போதை  தலைக்கேற 
யோசித்தான் அம்மன்னன் என்னதான் செய்வதென்று
மனதுள் உருவெடுத்து மலர்ந்ததோர் பெருலிங்கம் 
இதுவரை கண்டிராதஎவருக்கும் தோன்றிராத
மாலிங்க வடிவமது ..விக்கித்துப் போன  மன்னன்  
திசையெங்கும் பறையறைந்தான்...

சோழ சாம்ராஜ்ய விரிவைப்போல் 
பிரமாண்ட கோயிலொன்றை 
விரைவாகப் பணிய வேண்டும்.. போரெடுத்து 
வென்று வந்த பெரும் செல்வம் அத்தனையும்
மக்களுக்குப் போக மீதி  மகேசனின் பணிக்கேயென்றான் ...

மனதுள் உதித்தெழுந்த   மாலிங்க வடிவமதும்
பெரும் பரப்பில் உயர்ந்து நின்ற வான் முட்டும்
விமானமும் தினந்தோறும் கனவு கண்டான்   
கனவதனை நனவாக்க பலவாறு  சிந்தித்தான் ..

கல்லெடுக்க மலையொன்றை தானேப்போய்
கண்டுவந்து சிற்பிகள் உதவியோடு தரமான
கல்லென்று தரம் பிரித்து ஆராய்ந்து
தொலை தூரம் கொண்டுவர
தடம் போட்டு பாதை செய்து
பெருங்கற்கள்  பலகொண்டு தஞ்சையில்
குவித்து வைத்தான் .. இதுவரையில்
எவரும்  செய்யவே நினைக்காத
பெருலிங்கம்  செய்தெடுத்தான்....
லிங்கத்தை அமர்த்தியபின்
விமானம் உயரவைத்து
பல சிற்பம் அதிலமைத்து அற்புதம்
படைத்திட்டான்.. சிற்பிகள் மட்டுமன்றி 
அரசனும் உழைத்திட்டான்..

கோவிலின் பிரம்மாண்டம் 
சகலரும் பிரம்மிக்க .. நன்கொடைகள் 
தாராளம் வந்தங்கு சங்கமித்து  
மேன்மேலும்  மெருகேறி விமானம் விரிந்தெழ ...
பெருந்தச்சன் விரலசைக்க உளிகள் உறவாட
சிற்பங்கள் உயிரோட.. பெருவுடையார் கோயிலது 
பேரழகு கொண்டு நிற்க மன்னன் ராஜராஜன் 
வெளி நின்று உள்நோக்கி தன்னுள்ளே  யோசித்தான் 
இது நானா கட்டியது?பெருந்தச்சனா கட்டியது?
இல்லையில்லை .. எம் பெருவுடையார் 
தனக்குத் தானே கட்டியது 
அவனில்லாது  போயிருப்பின்    
எவனிதனை செய்ய ஒக்கும் ?'

பெருவுடையார் ஆசிக்காய்
நெடுங்கிடையாய் விழுந்தெழுந்தான்...
ராஜராஜேஸ்வரம் வாழும் பெருவுடையார் 
திருக்கோயிலென்று திரு நாமம் சூட்டி

தன் பெயரை மட்டுமன்றி
நன்கொடைகள் தந்தவரும்கோயிலுக்காய் 
உழைத்தவரும்சிற்பிகள் மொத்த பெயரும் 
கல்லில் செதுக்கி வைத்து .. அன்று முதல் 
அம்மன்னன் மாமன்னன் பெயரெடுத்து
இன்று வரை அங்கேயே வாழ்ந்துவரும்
அருள் மொழி வர்மனான
உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவர் வாழ்க வாழ்கவே...

பத்மநாபபுரம் அரவிந்தன் –