Sunday, September 8, 2013

பேரின்பம் 

- பத்மநாபபுரம் அரவிந்தன்-

குழந்தை தூங்கும்வரை

மவுனத்தைக் கட்டிக் கிடக்கும்

இருவரின் விரகமும்

ரகசியப் பேச்சும்..

மெல்லிய வெளிச்சத்தில்

கண்கள் மின்னி காமம் கொதிக்கும்

தூங்கியக் குழந்தையை

மெல்ல நகர்த்தி

உருளாமல் இருக்க

தலையணை வைத்து

மெதுவாய் வந்து அருகில் அணைக்க..

அடடா.. அதுதான் பேரின்பமே

No comments:

Post a Comment