Thursday, August 16, 2012


15-08-2012 வல்லமை இணைய இதழில் வெளியான என் கவிதை ...

மன  போதை 
பத்மநாபபுரம் அரவிந்தன் 

போதையென்பது வஸ்துக்களில்ல 
அது.. மனம் சார்ந்த நிலமைகளின்
வலிமைகளைப் பின்பற்றி 
மூளையைக் கிறக்குவது...

மனச் சோர்வின் போது 
ஒரு மிடறு போதும் ... தலைகேறித் தாவும் 
மகிழ்ச்சியின் உச்சத்தில் கோப்பைகள் பல 
உள்ளிறங்கிப் போனாலும் 
தாளம் தப்பித் தள்ளாடது...

உதடுக்கும் மதுக் கோப்பைக்குமிடையே   
மெல்லிய நுலிழையால் இணைந்து கிடக்கிறது 
போதைக் காற்றாடி ...
இருப்பதா பப்பதாவென்பது 
மனக் காற்றின் வேகத்தைப் பொறுத்தது.... 

No comments:

Post a Comment